இமயமலைச் சாரலிலே, உன் மடியில் துயில் கொண்டேன்.
இதயக்கோவில் மணியோசை உன் பெயரைக் கூறக் கண்டேன்.
பனிபடர்ந்த மலைமுகடு பட்டுத் தெறிக்கும் எதிரொலியாய்,
கனிமரங்கள் இடையினிலே காதல் செய்தாய் பனித்துளியாய்!
கணுவில்லாத கரும்பைப்போல சுவைக்கும் காதல் எனக்குத் தந்தாய்!
அணுவளவும் குறையில்லாமல் ஆரத்தழுவி போதை கொண்டாய்!!
மடியில் படுத்து வானம் பார்க்க நிலவைக் கண்டேனுன் முகத்திலே!
முடியை கோத விரல்கள் நீவ சொர்க்கம் கண்டேன் சுகத்திலே!!
கவிதை போல இனிக்கும் காதல் கரங்கள் கோர்த்து சிலிர்த்தது
மலரைப் போல மென்மையான மனங்கள் இணைந்து சிரித்தது.
பூச்செண்டை நாடி அருகில் பொன்வண்டும் வந்தது
தேனுண்ட களைப்பினிலே கனவுலகில் துயிலுது!
-சுமஜ்லா
என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.
Thursday, July 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment