என் கனவினில் கவியாக வந்தாய்
என் நினைப்பினை இனிப்பாக்கித் தந்தாய்
வான் வெளியிலே நிலவாக வந்தாய்
தேன் துளியதன் சுவையொன்று தந்தாய்
என் மடியினில் துயில் கொள்ள வந்தாய்
உன் மொழியினில் தேன் கலந்து தந்தாய்
மா மனிதனாக என் மனதை கவர்ந்தாய்
பூ மனத்தை வீசி என்னை கவர்ந்து இழுத்தாய்
சாய்ந்த என்னை தோளில் தாங்கி அணைத்தாய்
காய்த்து கனிந்து சுவைக்க இசைய பறித்தாய்
பூத்துக் குலுங்கும் பூவும் காதல் கொள்ளும்
சேர்த்து அணைக்க பூவை உள்ளம் துள்ளும்
விழிகள் பேசும் கதைகள் கோடி கண்ணா
துளிகள் சேர்ந்து வெள்ளமாகும் மன்னா
இளம் பிறையுமங்கு பௌர்ணமியாய் மாறும்
நம் இளமை அங்கு ஊஞ்சல் கட்டி ஆடும்
சுமஜ்லா
என் கவிதைகளை மட்டும் தனித் தொகுப்பாய், இதில் பதிந்துள்ளேன்.
Saturday, April 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment